தமிழகத்தில் கூடுதலாக 10 அரசு மாணவர் விடுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2013

தமிழகத்தில் கூடுதலாக 10 அரசு மாணவர் விடுதி.


தமிழகத்தின், 10 மாவட்டங்களில், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகள், புதிதாக அமைய உள்ளன.தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கட்டுப்பாட்டில், 1,209 விடுதிகள் உள்ளன. இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள இடங்களில் புதிய விடுதிகள் அமைக்க இத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரத்தநாடு, கோபி செட்டிபாளையம், தேனி, பரமக்குடி, பீளமேடு, வடசென்னிமலை, பாப்பாரப்பட்டி, நன்னிலம், உசிலம்பட்டி, தேனிநகரம் ஆகிய பகுதிகளில், புதிதாக, 10 விடுதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இப்பகுதிகளில், வாடகை கட்டடங்களில் விடுதிகள் செயல்படும்.டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், இந்த விடுதிகள் திறக்கப்படும் என தெரிகிறது. இதையொட்டி, அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு, நலத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. விடுதிகள் திறக்கப்பட்ட உடன், வழக்கமான நடைமுறையோடு, மாணவர் சேர்க்கை நடக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி