தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2013

தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து.


நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாகமாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த,
11 கல்லூரிகள்இடம் பெற்றுள்ளன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் பல்கலைக்கழக நிதிக் குழு (யு.ஜி.சி.,) இணைந்து, டில்லியில் கருத்து கேட்பு கூட்டத்தைநடத்தின. இதில், அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட, 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, ஒருமை வகை பல்கலைக்கழகஅந்தஸ்து பெற்ற கல்லூரிகள், அவர்களே மாணவர்களுக்கு பட்டம் வழங்கிக் கொள்ளலாம். பிற பல்கலைக் கழகங்களை சார்ந்து இருக்க வேண்டாம். அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. கல்லூரிகள் வருமாறு:கோவையில், கொங்கு நாடு கல்லூரி, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி; ஈரோட்டில், வெள்ளாளர் மகளிர் கல்லூரி; திருச்சியில், செயின்ட் ஜோசப், திருச்சி ஜமால் முகமது, திருச்சி தேசிய கல்லூரிகள்; மயிலாடு துறையில், ஏ.வி.சி., கல்லூரி; சிவகாசியில், ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி; மதுரையில், பாத்திமா கல்லூரி; பாளையங்கோட்டையில், செயின்ட் சேவியர் கல்லூரி உட்பட, 11 கல்லூரிகள் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளுக்கு, மூன்றாண்டு இடைவெளியில் அடிப்படை கட்டமைப்பு நிதியாக, 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி