இணைய தளத்தில்மாணவர்களின்ஆதார் எண் பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

இணைய தளத்தில்மாணவர்களின்ஆதார் எண் பதிவு.


பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் புள்ளி விவரங்கள் சரியாக இல்லாததால்
, அவற்றை செயல்படுத்துவதில், சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதற்காக, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், 2012-13ம் கல்வியாண்டில், 1 முதல், பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்களின் விவரங்கள், இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டன."ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விவரங்களுடன், மாணவர்களின் ஆதார் அட்டை எண்ணையும், பதிவு செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அப்பணி தற்போது துவங்கியுள்ளது. ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு, ஆதார்அட்டைக்கான விண்ணப்பத்தின் எண் பதிவு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி