தேர்தல் மற்றும் வருவாய்த்துறை பணிகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்வதை போல் மாணவர்களின் விபரத்தை கணினியில் பதிவு செய்ய ஒப்பந்த பணியாளர்களை
நியமிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாங்கு நேரி வட்டாரத் தலைவர் ஜோசப்ராஜ், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் புள்ளி விபரங்களை கடந்த கல்வி ஆண்டு முதல் கணினியில் ஏற்றும் பணி நடந்து வருகிறது. அதே புள்ளி விபரங்களில் தற்போது தேவையான திருத்தங்களை மேற் கொள்ள வட்டார வளமையத்தின் மூலம் புதிய மென் பொருள் அடங்கிய குருந்தகடு அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள் ளது.ஆனால் தொடக்கக் கல்வித்துறையின் கீழுள்ள பள்ளிகளில் கணிணி வசதி இல்லாததால் தனியார் கணினி மையங்களுக்கு சென்று விபரங்களை ஏற்ற வேண்டியுள்ளது. உரிய வழிமுறைகளின்றி பல ஆசிரியர்கள் தெரிந்த வரைக்கும் ஆதார் எண், புகைப்பட அளவு மாற்றம் போன்றவற்றை ஆசிரியர்கள் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.மென்பொருள்களுக்கான பாஸ்வேர்டுகள் தெரியாமல் பல ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது மீண்டும் அதே பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் கணினி யில் மாணவர்களின் விபரங்களை ஏற்ற ஒரு மாணவருக்கு ரூ.15 வரை செலவாகிறது. இந்த பணிகளில் ஈடுபடும் போது ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இரு ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது.எனவே தேர்தல் மற்றும் வருவாய்த்துறைப் பணிகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்கள்மூலம் பணிகள் மேற் கொள்வதைப் போல மாணவர் புள்ளி விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி