சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை கவனகக் கலை இளவல் - திருக்குறள் திலீபனுடன் மாணவர்கள் திடீர் சந்திப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2013

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை கவனகக் கலை இளவல் - திருக்குறள் திலீபனுடன் மாணவர்கள் திடீர் சந்திப்பு.


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு கவனகக்கலை இளவல்–திருக்குறள் திலீபன்வருகை புரிந்தார்,இவருடன் பள்ளி மாணவ மாணவிகள் சந்தித்து பல்வேறு கவனகக்கலை பற்றியும்,
நினைவாற்றல்
குறித்தும் விளக்கம் கேட்டனர்.




முன்னதாக சிறப்புரையாற்றினார். திருக்குறள் நான் சிறுவயது முதல் கற்றேன் .எனது பெற்றோர்எனக்கு ஊக்கமளித்து இத்துறைக்கு என்னை வழிகாட்டிச்சென்றனர்,கவனகக்கலை நினைவாற்றலைப்பெருக்கும் மனதும்,உணர்ச்சியும் தனித் தனியாகநமக்கு வழிகாட்டும். ஆனால் மனது சொல்படிதான் நாம்நடக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியடைய முடியும்,திருக்குறள் பயிற்சி அனைவரும் பெறவேண்டும். என சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்கள் திருக்குறள் பற்றிய சந்தேகங்களை எண்கள் கூறியும்,அதிகாரம் கூறியும் கேட்டனர்.சரியான திருக்குறளை திலீபன் எடுத்துக் கூறினார்.




கல்வி,அறிவுடைமை,ஒழுக்கமுடைமை,அடக்கமுடைமை,வான்சிறப்பு,போன்ற அதிகரங்கங்களில் இருந்தும் மாணவர்கள் வினாக்கள் கேட்டு திலீபன் சரியான பத்தி சொன்னது கண்டு வியந்தனர்.மேலும் இரண்டு உதடுகளுக்கு நடுவில் குண்டுசியை வைத்து உதடுகள் ஒட்டாமல் திருக்குறளை கூறி அசத்தினான் திருக்குறள் திலீபன் .இருபது வரிசை எங்களை வரிசைபடுத்தி மாணவர்கள் பெயர்களைகூறச்செய்து அதை வரிசைபடுத்தியும் தலை கீழாகவும்,கேட்ட எண், பெயர்களையும், திலீபன் கூறி நினைவாற்றல் குறித்து விளக்கமளித்தார்.




மாணவர்கள் நடராஜன், சொர்ணாம்பிகா, சுபலட்சுமி, ஜீவா,ரத்னா,நவீன்,சிவகுமார்,மணிகண்டன்,வினாக்கள் கேட்டும் பாராட்டி பேசியும் பயனுடையதாய் அமைந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.


Thanks & Regards,


L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGTHead Master,
Chairman Manicka VasagamSchool,
Devakottai.
9786113160

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி