மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவுத் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2013

மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவுத் தேர்வு.


அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட, அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில்
முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்கல்வி முறையால், மாணவர்களின் கல்வி தரம் மேம்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிடுவதற்காக, அடைவுத் தேர்வுகள் நடத்தப்படஉள்ளன. இத்தேர்வு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. இதற்காக, வட்டார அளவில், 10 மாணவர்களுக்கு குறையாமல்உள்ள, தலா, 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பட்டியல், அனைவருக்கும் கல்வி இயக்க இயக்குனநரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அடைவுத் தேர்வுக்கான நாள் அறிவிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி