10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.2 முதல் செய்முறை பயிற்சி வகுப்பு தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2013

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.2 முதல் செய்முறை பயிற்சி வகுப்பு தொடக்கம்.


பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் அறிவியல் பாடப் பிரிவை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல்
வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். அதேபோல பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செய்முறைத் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுமார் 8 லட்சம், மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்.இவர்கள் தவிர ஏற்கெனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதுவோர், முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வை தனித் தேர்வர்களாக எழுதுவோர் ஆகியோரும் இந்த செய்முறைத் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.மேற்கண்ட தனித் தேர்வர்கள் செய்முறைத் தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்து ஏற்கெனவே தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இரண்டு மையங்கள் அமைக்கப்படும். அங்கு மேற்கண்ட தனித் தேர்வர்கள் நேரில் சென்று செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி பெற வேண்டும். அப்போது, 5 செய்முறைகளை ஆசிரியர்கள் செய்து பயிற்சி அளிப்பார்கள்.

இந்த பயிற்சி ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள்துறை தெரிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வில் 25க்கு 15 மதிப்பெண் எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாகவே பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம்உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி