பாடப்புத்தகம், நோட்டுகள் ஜன., 2ல் இலவசமாக வினியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2013

பாடப்புத்தகம், நோட்டுகள் ஜன., 2ல் இலவசமாக வினியோகம்.


வரும், 23ம் தேதி வரை, அரையாண்டு தேர்வுகள் நடக்கின்றன; அதன்பின்,தேர்வு விடுமுறை. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கும். அப்போது, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் நான்கு ஜோடி சீருடைகள், இலவசமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள், இப்போதே நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழ்நாடு பாட நூல் கழக செயலர், அன்பழகன் கூறியதாவது:

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்காக, 2.4 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. 70 சதவீத புத்தகங்கள், மாவட்டங்களுக்கு, அனுப்பப்பட்டு விட்டன. 20ம் தேதிக்குள், 30 சதவீத புத்தகங்களும், மாவட்டங்களுக்கு சென்று விடும். எனவே, தேர்வு விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்த முதல் நாளன்றே, இலவச புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்படும். அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடவும், ஏற்பாடு செய்துவிட்டோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி