8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பம், ஆன்-லைனில் இதுவரை வெளியிடப்படாததால், தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பயிலும் எட்டாம் வகுப்பு
மாணவர்கள் மேல்படிப்பை தொடரும் பட்சத்தில், மத்திய அரசு சார்பில், வழங்கப்படும் ரூ.1500 கல்வி உதவித்தொகைக்காக, தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும், டிசம்பரில் நடத்தப்படுகிறது. மாநில தேர்வு வாரியம் இதற்கான தேர்வை நடத்துகிறது.ஏழாம் வகுப்பு ஆண்டு இறுதிதேர்வில், எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்கள் 50 மதிப்பெண்ணும், மற்ற மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருந்தால், இத்தேர்வை எழுதலாம். அறிவியலில் 35, கணிதத்தில் 20, சமூக அறிவியலில் 35 மதிப்பெண் என மொத்தம் 90 மதிப்பெண்ணுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கானவிண்ணப்பங்கள், ஆண்டுதோறும் நவம்பரில் வெளியிடப்படும்.கடந்த ஆண்டு, நவ.1 முதல் 9ம் தேதிக்குள், அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு, டிசம்பர் 30ம் தேதி தேர்வு நடந்தது. ஆசிரியர் ஒருவர் கூறும்போது: டிசம்பரில், அரையாண்டு தேர்வு தொடங்குவதை முன்னிட்டு, முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்படுவதால், மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கும் தயாராகி வந்தனர்.இந்த ஆண்டு, மாநில தேர்வு வாரியம், இதற்கான அறிவிப்பையோ, ஆன்-லைனில் விண்ணப்பத்தையோ வெளியிடவில்லை. அத்தேர்வை எதிர்கொண்டுள்ள ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு விரைவில் அறிவிப்பை வெளியிட்டு தேர்வை நடத்த முன்வரவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி