ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி, விடுதிகளில் பணியாற்றும், ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு மாதந்தோறும், குறைதீர் முகாம் நடத்த வேண்டும்" என
ஆதிதிராவிட நலத்துறை உத்தரவிட்டுள்ளது.நலத் துறையின் கீழ் 1,065 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்; 301 உண்டி உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன. அதே போல், 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள்; 301 அரசு பழங்குடியினர், உண்டு உறைவிட பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாதத்திலும், குறைதீர்ப்பு முகாம் நடந்து வருகிறது. ஆனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும், பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு, இதுவரை குறைதீர் முகாம் நடத்தப்படவில்லை.இந்நிலையில், "அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, விடுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு, மாதந்தோறும், குறைதீர்முகாம்கள் நடத்த வேண்டும்" என அனைத்து மாவட்ட நல அலுவலர்களுக்கு, நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக நடந்து வந்த ஆசிரியர் காப்பாளர்களின் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி