ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி.


வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் (செக்யூரிட்டி) கிரேடு ‘ஏ’ பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப
ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் பணியாற்றியவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மேலாளர் (செக்யூரிட்டி) கிரேடு ‘ஏ’

காலியிடங்கள்: 34

தகுதி: ராணுவம், கப்பல் படை, விமானப்படை போன்ற ஏதாவதொன்றில் அதிகாரி அந்தஸ்தில் 5 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவப்படைகளான பிஎஸ்எப்., சிஆர்பிஎப், ஐடிபி, சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி, அசாம் ரைபிள்ஸ், ஆர்பிஎப், எஸ்பிஎப், பாதுகாப்பு காவல் படை, சிறப்பு எல்லை படை மற்றும் ஊர்க்காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு

செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு:
தமிழகத்தில் சென்னையில் நடைபெறும்.மேலும் கட்டணம், கட்டணம் செலுத்தும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2013

ஆப்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 21.12.2013.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.12.2013

ஆன்லைனில் விண்ணப்பித்த பிரின்ட் அவுட்டை சாதாரண அஞ்சலில் வந்து சேர கடைசி தேதி்: 24.12.2013.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி