மதுரை மாவட்ட ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டையில் குழப்பம் இருந்தால், அரசு ஊழியர்களுக்கான மாவட்ட காப்பீட்டுத் திட்டஅலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,'' என, ஒருங்கிணைப்பாளர்
பழனி கூறினார்.அவர் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டைகளில், பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்கள் மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நிறுவன "ஆன்லைன்' முகவரிக்கு சென்று, குடும்ப நபர்களை புதிதாக சேர்ப்பது அல்லது நீக்குவது, பெயர் மற்றும் வயது திருத்தம் போன்ற திருத்தங்களைமேற்கொள்ளவும் வசதி உள்ளது."ஆன்லைனில்' திருத்தங்கள் மேற்கொள்ள முடியாதவர்கள், "மதுரை நேதாஜி ரோடு, 46, தாமஸ் காம்ப்ளக்சில்' செயல்பட்டு வரும் மாவட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று தீர்வுகாணலாம் அல்லது 73737 03114ல் தொடர்புகொள்ளலாம். அட்டையில் பெயர், புகைப்படம் மாறியிருப்பதால், பயனாளிகளுக்கு சிகிச்சை பெறுவதில் பாதிப்பு ஏற்படாது, என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி