சிறு திருந்தங்களுடன் ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2013

சிறு திருந்தங்களுடன் ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்.


சிறு திருந்தங்களுடன் ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்:

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.


* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படு­ம்.

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.(மருத்துவ விடுப்பிற்கு மட்டுமே குறைந்தது 2 நாட்கள் தொடர்ந்து எடுக்கவேண்டும்).

*மருத்துவ விடுப்பும் ஒரு நாள் மட்டும் தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்.

*அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

கல்விச்செய்திக்காக,
தோழமையுடன்,
தேவராஜன், தஞ்சாவூர் .

3 comments:

  1. 11 days ML eduthala half day EL kuraium. Atha round off panni one day EL kuraium. So ML 11 days il irundu 30 days varaikum eduthaal one day EL kuraium. 31 days ML eduthaal 2 days EL kuraium.

    ReplyDelete
    Replies
    1. இரவுக்காவலா் மற்றும் துப்புரவாளா்களுக்கு எத்தனை நாள் EL சாா் வருடத்திற்கு

      Delete
  2. 365 nalukku 17 nal el 344 nalukku 16 nal el 350 nalkkal enil 16 nal el kidaikkum methi 6 nalkkalai adutta varudam 365 nalkkaludan sertthukollalama vilakkamalikkayum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி