கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிப்ரவரி 15ல் மாணவர் சேர்க்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிப்ரவரி 15ல் மாணவர் சேர்க்கை.


நாடெங்கிலும் உள்ள 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கவுள்ளன. சேர்க்கை அறிவிப்பு மற்றும்
வழிகாட்டு விதிமுறைகள், வெகு விரைவில், கேந்திரிய வித்யாலயா சங்கதனால்(sangathan) வெளியிடப்படும்.அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டமாணவர்கள், தொடக்க வகுப்பில் சேர்க்கை பெறுவார்கள் மற்றும் அவர்களில் சுமார் 20,000 பேர், டில்லி பிராந்தியத்தில் உள்ள 80 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

டில்லியில் மட்டுமே 60 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மொத்த இடங்களில் 25%, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக ஒதுக்கப்படும். ஆனால், அந்த சலுகைக்கான விண்ணப்பங்கள், இருக்கும் இடங்களைவிட அதிகரித்தால், ஒவ்வொரு பிரிவிலும் லாட்டரிமுறை பின்பற்றப்படும்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சேர்க்கை நடைமுறைகளில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இந்த ஆண்டு இருக்காது. சில சிறிய மாற்றங்களைப் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால் தெரிவிக்கப்படும். 8ம் வகுப்பு வரை எந்த சேர்க்கை நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி