தலைமை ஆசிரியர்களுக்கு நாளை முதல் சிறப்புப் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

தலைமை ஆசிரியர்களுக்கு நாளை முதல் சிறப்புப் பயிற்சி.


்கடந்த கல்வி ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில்
அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி மற்றும் முதல் மதிப்பெண் பெற கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் 70 சதவீத தேர்ச்சிக்கு குறைவாக எடுத்த அரசு பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, பள்ளிகள் வாரியாக, அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல், கடந்த கல்வி ஆண்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் 70 சதவீத தேர்ச்சிக்கும் குறைவாக காட்டிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரிகள், குறிப்பிட்ட பாட ஆசிரியர் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.முதல் கட்டமாக நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, நாளை (10ம் தேதி) ஈரோடு அடுத்த திண்டல் வேளாளர் கல்லூரியில் பயற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியை பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் சபீதா, மாநில தேர்வுத்துறை அதிகாரிகள்உள்ளிட்ட கல்வித்துறையினர் பங்கேற்று 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சிக் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்." இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி