பிளஸ் 2 தேர்வு கட்டணம் 21ம் தேதி முதல் செலுத்த உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2014

பிளஸ் 2 தேர்வு கட்டணம் 21ம் தேதி முதல் செலுத்த உத்தரவு.


பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டில் பள்ளிகள் மூலம் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.பிளஸ் 2 வகுப்பில் தமிழ் வழியில்

படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். அதனால், ஆங்கில வழியில் படிக்கும் பிசி, ஓசி பிரிவை சேர்ந்த மாணவர்களின் பெற்றோரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால், அந்த வகை மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.செய்முறைத் தேர்வுகள் உள்ள பாடங்களில் தேர்வு எழுதுவோர் தேர்வுக் கட்டணம் ரூ.225, மற்ற பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதுவோர் ரூ.175 செலுத்த வேண்டும். டிஎம்எல் மதிப்பெண் பட்டியலுக்காக அனைவரும் தலா ரூ.300 செலுத்த வேண்டும். 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் இதை செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.கட்டணம் அனைத்தும் கருவூலம் மூலம் செலுத்த வேண்டும்.

அதற்கான படிவங்களை தேர்வுத் துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து கருவூலத்தில் செலுத்தி அந்த ரசீதுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 வகுப்புக்கான மாணவர்கள் பட்டியல்(நாமினல் ரோல்) தேர்வுத்துறை வாங்கியுள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான மாணவர்கள் பட்டியல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்து விட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி