தென்மாநில பள்ளி அறிவியல் கண்காட்சி: 20 முதல் 24ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2014

தென்மாநில பள்ளி அறிவியல் கண்காட்சி: 20 முதல் 24ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.


தென்மாநில அளவிலான பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி, சென்னையில், வரும் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழ்நாடு

ஆகிய மாநிலங்களில், அந்தந்த மாநில அளவில், பள்ளி மாணவரிடையே, அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட அறிவியல் படைப்புகளைக் கொண்டு, தென்மாநில அளவிலான, 27வது அறிவியல் கண்காட்சி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், வரும் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, பள்ளி"க் கல்வித் துறை செய்துள்ளது. இதில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் குழு பங்கேற்கி"றது.ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், 50 மாணவர், 50 ஆசிரியர் என, 250 பேர்பங்கேற்பர்; 250 அறிவியல் படைப்புகள், காட்சிக்கு வைக்கப்படும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். கண்காட்சியை, பள்ளிக்கல்வி அமைச்சர், வீரமணி துவக்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி