தேசிய வருவாய் வழி, திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஜன.,20 வரை நீடிக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

தேசிய வருவாய் வழி, திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஜன.,20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


தேசிய வருவாய் வழி, திறன் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க,ஜன.,20வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும்
தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவி தொகை திட்டத்தேர்வு பிப்.,22ல் நடக்க உள்ளது. தேர்வு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 செலுத்த வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு, பிளஸ்2 வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வு எழுதுபவர்கள், ஜன.,10 வரை, www.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிக்கும் தேதி, ஜன.,20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பித்தபின், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்துடன், ஜன.,21, 22 ல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலங்களிலும்,நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி