2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75%ஆக உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2014

2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75%ஆக உயர்வு.


2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில்,
பி.எப் வட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதியை நிர்வகித்து வரும் இந்த அமைப்பு, தனது சேவையை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள 2,700 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மையங்களிலும் விரைவில் ஒரு புதிய கணினி மென்பொருளைபயன்பாட்டுக்கு கோண்டு வந்து அதன் மூலம் சேவை கண்காணிப்பை அதிகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி