இணையதளம் மூலம் 288 பள்ளிகள் ஒருங்கிணைக்கும் திட்டம் : முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2014

இணையதளம் மூலம் 288 பள்ளிகள் ஒருங்கிணைக்கும் திட்டம் : முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கம்.


மாநிலம் முழுவதும் இணையதளம் மூலம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் குறித்த முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வித்தரத்தை
மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம், அறிவுசார் பள்ளிகள், இ.ஐ.எம்.எஸ்., கணினி உதவியுடன் கற்பதற்கான மொழி ஆய்வகங்கள், இணையதள வழி கண்காணிப்பு போன்ற பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது.தற்போது, இணையதளம் மூலம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை ( கனெக்டிங் கிளாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 160 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளிலும், 128 நடுநிலை பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில், இத்திட்டத்தைசெயல்படுத்த ஐந்து குழுக்கள் நிர்வாக அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இதற்கான, பயிற்சிகளை கோவை, திருச்சி, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நான்கு மண்டலங்களாக பிரித்து வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இப்பயிற்சி மற்றும் முன்னோட்ட பணிகளுக்கான பரிசோதனை நடந்தது. முன்னோட்ட பணிகளுக்காக, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில், இத்திட்டத்திற்காக தேர்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் 174 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் தேர்வு பெற்ற கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதிஉயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளை இணையதளம் மூலம் ஒருங்கிணைத்து பரிசோதனை செய்யப்பட்டதுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டது.கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில்,"" இத்திட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்தப்படுவதுடன் ஆசிரியர்களின் கற்பிக்கும் தரமும் மேம்படுத்தப்படும்.இதற்கான முன்னோட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் தமிழகமுதல்வர் அதிகார பூர்வமாக துவக்கிவைப்பார், '' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி