குரூப் 2 தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2014

குரூப் 2 தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டில் நேர்காணல் இல்லாத 1,181 பணியிடங்களுக்கான குரூப் 2-A தேர்வு
மே மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்தின் 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர்க்கான தேர்வு ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக பணிக்கு இந்தாண்டு கூடுதல் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி 5,566 பணியிடங்களுக்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை என்பதால், காலியிட விவரம் தற்போதைய அட்டவணையில் இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி