அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் பரிசு: அரசுக்கு ரூ.308 கோடி செலவாகும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2014

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் பரிசு: அரசுக்கு ரூ.308 கோடி செலவாகும்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 308.28 கோடி ரூபாய் மதிப்பில்,பொங்கல் போனஸ் மற்றும் சிறப்பு போனசை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருணை தொகை:

இதுகுறித்த அவரது அறிக்கை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் முதன் முறையாக, பொங்கலன்று கருணைத் தொகை வழங்குவதை எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்தினார்.இதன்படி, 2012 - 13 நிதியாண்டிற்கு, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு, 30 நாள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கப்படும்.அரசு அலுவலர்களில், 'ஏ' மற்றும் 'பி' பிரிவினர், ஆசிரியர்கள், 2012 - 13ம் நிதியாண்டில் குறைந்த பட்சம், 240 நாள்அல்லது அதற்கு மேலாக பணியாற்றி, சில்லறை செலவினத்தின் கீழ், மாத அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள்; தொகுப்பூதியம் பெறுவோருக்கு, 1,000 ரூபாய் கிடைக்கும்.மேலும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு திட்ட பணியாளர்கள்; அங்கன்வாடிபணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; பஞ்சாயத்து உதவியாளர்கள்; ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள்; தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி,பின் நிரந்தர பணியாளர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கும், 1,000 ரூபாய் கிடைக்கும்.

பல்கலை குழு:

உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு; அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு; இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ், சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த, போனஸ் பொருந்தும்.

ரூ.500 பரிசு:

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தலையாரி மற்றும் கர்ணமாக இருந்த, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு, 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும். இதனால், அரசுக்கு, 308.28 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. முதல்வரின் இந்த போனஸ்அறிவிப்பை, அரசு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி