பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்றக் கோரிஆசிரியர்கள் பிப்ரவரி 5-ல் ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2014

பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்றக் கோரிஆசிரியர்கள் பிப்ரவரி 5-ல் ஆர்ப்பாட்டம்.


பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்
சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி,’’வரும் மார்ச் மாதம் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 9.15 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற மாணவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், இதனை மாற்றி, வழக்கமான முறையில் காலை 10 மணிக்கு தேர்வு களைத் தொடங்க வேண்டும்.

முப்பருவக் கல்வி முறையை அடுத்தக் கல்வியாண்டு (2014-15) முதல் பத்தாம் வகுப்பில் அறிமுகப் படுத்தினாலும், அந்த வகுப்பில் பொதுத்தேர்வு முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும்.அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தவர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.சிறப்பாகப் பணியாற்றி வந்த அனைவரையும் மீண்டும் அதே பணிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம், அதிக எண்ணிக்கையிலான மாவட்டக் கல்வி அலுவலர் பணியி டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்விஅலு வலகங்கள் முன்பு பிப்ரவரி 5-ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி