செவிலியர் பணி எழுத்துத் தேர்வுக்கு, அரசு கல்லூரிகள், அரசின் அங்கீகாரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் படித்தவர்களை அனுமதிப்பது தொடர்பான, சுகாதாரத் துறையின் உத்தரவு செல்லும்" என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சுகாதாரத்துறை,
2012 ஜனவரியில், ஒரு அரசாணை வெளியிட்டது. அதில்"செவிலியர் பணியிடங்களை, அரசு கல்லூரிகள் மற்றும் அரசின் அங்கீ காரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பலாம்.
எழுத்துத் தேர்வுமூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் இந்த நியமனம் நடக்கும்" என கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுகாதாரத் துறை பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்தார். கடந்த, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக சுகாதாரத் துறை மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம், அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தன. மனுக்களை, தலைமை நீதிபதி அகர்வால், சத்திய நாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரித்தது.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் - ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அரசு பிளீடர், மூர்த்தி, சிறப்பு அரசு பிளீடர், ராஜகோபாலன், செவிலியர் சங்கம் சார்பில், வழக்கறிஞர், சந்திரசேகர் ஆஜராகினர்.
மனுக்களை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்த டாக்டர்களை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த டாக்டர்களுடன், அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிப்பதாக, கூடுதல் அட்வகேட் - ஜெனரல், அரவிந்த் பாண்டியன், சரியாக சுட்டிக் காட்டினார்.எனவே வேலைவாய்ப்புக்காக அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் படித்த டாக்டர்களை, போட்டியிட அனுமதிக்கும் போது "அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் மட்டுமே, வேலைக்கு தகுதியுடையவர்கள்" எனக் கூற முடியாது. சுகாதாரத் துறையின் உத்தரவு, சென்னை மருத்துவப் பணி விதிகளின்படி உள்ளது.அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் என்றாலும், அவர்களை போட்டி யிட அனுமதித்து, அவர்களில் தகுதி, திறமை பெற்றவர்களே தேர்ந்தெடுக்கப்படுவர். இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பலன்கிடைக்கும். தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. அரசு மற்றும் செவிலியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி