வேட்டி தினம்: மாணவர்களிடம் பலத்த வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

வேட்டி தினம்: மாணவர்களிடம் பலத்த வரவேற்பு.


கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்த வேட்டி தினத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு 1 லட்சம் வேட்டிகள்விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து பொங்கல் வரை ஏதேனும் ஒரு நாளை வேட்டி தினமாக அறிவிக்க வேண்டும். அன்று அனைத்து ஊழியர்களும், வேட்டி அணிந்து வர வேண்டும். தேவையான வேட்டிகளை கோ - ஆப்டெக்சில்வாங்க வேண்டும்" என, வேண்டுகோள் விடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர், கல்லூரி, பல்கலைக்கழகம், அரசு துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்திற்கு,அனைத்து தரப்பிலும், வரவேற்பு கிடைத்துள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில்"வேட்டி தினம்" அறிவிக்கப்பட்டு அனைத்து ஊழியர்களும் வேட்டி அணிந்து வந்து புதுமை படைத்தனர். நேற்று முன்தினம் கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டிஅணிந்து வந்தனர். சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 10ம் தேதி; மதுரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 13ம் தேதி, வேட்டி அணிந்து வர உள்ளனர்.அதேபோல், பல்வேறு பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் "வேட்டி தினம்" கொண்டாட முடிவு செய்து கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேட்டி வழங்கும்படி கடிதம் கொடுத்துள்ளனர்.இது குறித்து, சகாயம் கூறியதாவது: "அனைத்து தரப்பு மக்களிடமும் வேட்டி தினத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால், இம்மாதம் இதுவரை 25 ஆயிரம் வேட்டிகள் கூடுதலாக விற்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக 40 ஆயிரம் வேட்டிகள் விற்பனையாகும். இம்முறை 1 லட்சம் வேட்டிகள் விற்பனையாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது." இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி