தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன்
வளர்க்கும் பயிற்சிமுகாம் நடைபெற்றது .

பயிற்சியில் 8ம் வகுப்பு மாணவர்
ஷன்முகப்ரகாஷ் வரவேற்றார் .பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி தேசிய வருவாய் வழி தேர்வு குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.கவிஞ்ர் லயன் தெட்சிணா மூர்த்தி முன்னிலை வகித்து பயற்சி குறித்தும் தேர்வு குறித்தும் விளக்கமாக சிறப்புறை வழங்கினர் .

ஈரோடு ரயில்வே பள்ளிஆசிரியர் துரைபாண்டியன் பய்ற்சியளராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு வார்த்தை அமைப்பு,கணித முறை,நுண்ணறிவு திறன் ,வினாக்கள் அமைப்பு,பதிலளிக்கும் கூறுகள் குறித்தும் பயற்சி அளித்தார் .பயிற்சியில் பள்ளிமாணவ மாணவியர்கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இனி வரும் காலங்களில்.பயிற்சி வகுப்புகள் மாணவர்களின் நலன் கருதி வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்த பட உள்ளன.இதனால் அதிகமான மாணவர்கள் பயன் பெற்று அரசால் வழங்கப்படும் படிப்பு உதவி தொகை பெற வாய்ப்பு உண்டு.தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் 500 ரூபாய் அரசால் வழங்கப்படும் .பயற்சி நிறைவில் 8ம் வகுப்பு மாணவி அபிநயா நன்றி கூறினார்.பயற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக் கலந்து கொண்ட மாணவ மாணவியர் தெரிவித்தனர்.
Thanks & Regards,
L.Chokkalingam,
Head Master,
Chairman Manicka Vasagam School,
Devakottai.9786113160 .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி