சென்னையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று வேட்டி அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும்,
நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 6ம்தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் வேட்டி அணிந்து அத்தினத்தை கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று ஒரு நாள் வேட்டி அணிந்து பணிக்கு வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை அடுத்து அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று வேட்டி அணிந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி