பள்ளிப் பேருந்து பாதுகாப்பு - ஜி.பி.எஸ். பொருத்துவதை கட்டாயமாக்கியது சி.பி.எஸ்.இ. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2014

பள்ளிப் பேருந்து பாதுகாப்பு - ஜி.பி.எஸ். பொருத்துவதை கட்டாயமாக்கியது சி.பி.எஸ்.இ.


பள்ளிப் பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பள்ளிப் பேருந்துகள் அனைத்தும், GPS (Global Positioning System)
அமைப்பைக் கொண்டிருப்பது கட்டாயம் என்று CBSE அறிவித்துள்ளது.இதன்மூலம் பள்ளிப் பேருந்தின் இருப்பிடத்தை அறிய முடியும். பேருந்தில் பொருத்தப்படும் GPS அமைப்பு, Automotive Research Association of India என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.அனைத்து CBSE பள்ளிகளும், போக்குவரத்து காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்டவருடாந்திர பாதுகாப்பு போக்குவரத்து அமைப்பு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.GPS மூலமாக, பள்ளிப் பேருந்து எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய முடிவதால், பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பிலேயே பேருந்தை எப்போதும் வைத்திருக்க முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி