முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் 7 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் நீதிமன்ற ஆணை பெற்ற 7 பேரும் இன்று (02.01.14) சென்னையில் உள்ள டிஆர்பி அலுவலகத்துக்கு நீதிமன்ற ஆணையுடன் நேரில் சென்று தங்களையும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி தனித்தனியாக மனுஅளித்ததாகவும் மனுவைப்பெற்றுக்கொண்ட டிஆர்பி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பின்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும் எனக்கூறியதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் புதியதாக இதே போன்று தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழஙக்கோரி மேலும் சில வழக்குகள் நளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Dear Friends, PG Tamil Tentative selection list published in official website
ReplyDelete