பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசனை 25ம் தேதி நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசனை 25ம் தேதி நடக்கிறது.


பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக சென்னையில் வருகிற 25ம¢ தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை
ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் கல்வி அலு வலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலு வலர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 25ம்தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அமைந்து உள்ள தமிழ்நாடு மாசு கட்டு ப்பாட்டு வாரிய கூட்டரங்கில் நடக்கிறது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைசெயலாளர் சபிதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சிவிகிதம் அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வ¤வாதிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் க ல்வித் துறை செய்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி