சரியாக பணிக்கு வராத ஆசிரியர் "சஸ்பெண்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

சரியாக பணிக்கு வராத ஆசிரியர் "சஸ்பெண்ட்'


பள்ளிக்குச் சரியாக வராமல் இருந்த, பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகணித ஆசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர், திருமூர்த்தி, 45.

இவர், சரியாக பள்ளிக்கு வருவதில்லை என, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு புகார் வந்தது. நேற்று முன்தினம், பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டவர், கணித ஆசிரியர் திருமூர்த்தியின் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைத்தார். அதில், அதிக மாணவர்கள், "பூஜ்யம்' மதிப்பெண் பெற்றனர். அதிர்ச்சியடைந்த தொடக்கக் கல்வி அலுவலர், திருமூர்த்தி குறித்து விசாரணை நடத்தி, வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தார். முறையாக பாடம் நடத்தாமல், மாணவர்கள் கல்வி பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காகவும், முறையாக பதிவேடுகளை பராமரிக்காததாலும், சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வராமல் அலட்சியாக இருந்ததாலும், கணித ஆசிரியர் திருமூர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து, தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி