பி.இ., சேர்க்கைக்காக 3 லட்சம் விண்ணப்பம் அச்சடிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

பி.இ., சேர்க்கைக்காக 3 லட்சம் விண்ணப்பம் அச்சடிப்பு.


பி.இ., சேர்க்கைக்காக, மூன்று லட்சம் விண்ணப்பங்களை அச்சிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்து உள்ளது. விண்ணப்பம் மற்றும் தகவல் புத்தகம் அச்சிட, 2.2 கோடிரூபாய்க்கு, "டெண்டர்' அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன.
இதில், 2.34 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. இந்த ஆண்டு, புதிய கல்லூரிகள் வரவு மற்றும் தனியார் கல்லூரிகளின்,"சரண்டர்' இடங்கள் ஆகியவை காரணமாக, மேலும் சில ஆயிரம் இடங்கள், கூடுதலாக, கலந்தாய்வுக்கு வரும்.இதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, மூன்று லட்சம் விண்ணப்பங்களை அச்சிட, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது. விண்ணப்பம் மற்றும் கல்லூரிகளின் விவரங்கள் அடங்கியபுத்தகம் அச்சிட, கடந்த, 31ம் தேதி, "டெண்டர்' அறிவிக்கப்பட்டு உள்ளது.விலையில் மாற்றம் இருக்காது : கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, 250 ரூபாயாகவும், இதர பிரிவினருக்கு, 500ரூபாயாகவும், விண்ணப்பத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டது. "இந்த ஆண்டும், விண்ணப்பத்தின் விலையில், எந்த மாற்றமும் இருக்காது' என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி