'அங்கன்வாடி செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2014

'அங்கன்வாடி செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்.


குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள் காலமுறைப்படி, முறையாக செயல்படுவதை கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சமகல்வி இயக்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு சமகல்வி இயக்கத்தின், சென்னை மாவட்டம் சார்பாக, அங்கன்வாடி மேம்பாட்டிற்கான, கருத்தரங்கம் நடந்தது. அதில், அங்கன்வாடி மையங்களின் மேம்பாட்டிற்காக, நிர்வாகிகள் விடுத்து உள்ள கோரிக்கைகள்: சென்னை மாவட்டத்தில், வாடகை கட்டடங்களிலும், ஓடு வேய்ந்த கட்டடங்களிலும் செயல்படும், அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம், அமைத்து தர வேண்டும்; அங்கன் வாடியில் வழங்கப்படும் உணவை, ஊழியர்கள் உண்டு, பரிசோதித்த பின்னரே, குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்; அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், மின் இணைப்பு வழங்கி, குழந்தைகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். உணவுப்பொருள் விலையேற்றத்திற்கு தகுந்தாற் போல், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுத்தொகையை, இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்; ஆசிரியர் மற்றும் உதவியாளர்களின், பணியிடங்களை பூர்த்தி, செய்ய வேண்டும்; புதிய மையங்களை, திறக்க வேண்டும்; காலமுறைப்படி, செயல்படுவதை அனைத்து மையங்களும் செயல்படுவதை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி