போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2014

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம்.


கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில சங்கங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டமும், பிப்ரவரி 26-ம்தேதி ஒருநாள் விடுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு,அனைத்து மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், சுமார் 1,300 ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பட்டியல் பெறப்பட்டவுடன், சம்பளம் பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி