‘அரசு வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல’: சுப்ரீம் கோர்ட்டு கருத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2014

‘அரசு வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல’: சுப்ரீம் கோர்ட்டு கருத்து


அரசு வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல என்று, சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

வாக்குறுதி மீறல்

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சில தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 1990-ம் ஆண்டு மாநில அரசு சில வாக்குறுதிகளை அளித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி அந்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குமின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.அந்த உறுதிமொழியை மாநில அரசு நிறைவேற்றாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.சிக்ரிஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தது.மாநில அரசின் கடமைநீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அரசு வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல்இருப்பது நியாயமற்றது; நெறிமுறைகளுக்கு முரணானது என்று குறிப்பிட்டு உள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது- “அரசு ஒரு வாக்குறுதியை அளிப்பதற்கு முன்னால் அதை நிறைவேற்ற முடியுமா? அதன் சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்து தெளிவாக ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்து இருக்க வேண்டும்.

அது தொடர்பான அம்சங்களை ஆராய்ந்து பார்க்காமல் வாக்குறுதி எதையும் அளிக்கக்கூடாது.அப்படி வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் அதை நிறைவேற்றாமல் இருப்பது விதிமுறை மீறல் மட்டுமின்றி, தார்மீக நெறிமுறைகளுக்கும் எதிரானது. குறிப்பிட்ட இந்த வழக்கில், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் பயனை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்”.இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி