பி.எப் சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2014

பி.எப் சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண்.


பிஎப் சந்தாதாரர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசு பிஎப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சந்தாதாரர்களுக்கு பிஎப் கணக்கு எண் வழங்கியுள்ளது. ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறு ஒருநிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவரது பிஎப் கணக்கு எண்ணும் மாற்றப்படும்.

இதனால் அந்த தொழிலாளிக்கும் நடைமுறை சிக்கல் உருவாகும். அதேபோல பிஎப் அலுவலகத்திலும் பணி சுமை அதிகரிக்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, பிஎப்சந்தாதாரர்கள் அனைவருக்கும் நிரந்தர கணக்கு எண் வழங்கட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, பிஎப் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மத்தியஅறக்கட்டளை வாரிய (சிபிடி) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய தொழிலா ளர் அமைச்சக செயலாளர் கவுர்குமார் உத்தரவிட்டதாக பிஎப் வட்டாரங்கள் தெரிவித்தன. நிரந்தர கணக்கு எண் வழங்கும் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும் என்று பிஎப் ஆணையர் கே.கே.ஜலாலை தொழிலாளர் துறை செய லாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த திட்டத்தை 2014 2015ம் ஆண்டில் செயல்படுத்துவதில் எந்த சங்கட மும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எக்ஸ்ட்ரா தகவல்:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் சுமார்5 கோடி தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி