மலைப் பகுதி பள்ளிகளில் ஆன்-லைன் வழி வகுப்புகள்: முதல்வர் தொடங்கினார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

மலைப் பகுதி பள்ளிகளில் ஆன்-லைன் வழி வகுப்புகள்: முதல்வர் தொடங்கினார்.


தொலைதூர மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்காக ஆன்-லைன் வழியாக வகுப்பு எடுக்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா
புதன்கிழமை தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்தின் மூலம் திறமைமிக்க ஆசிரியர்கள் மாவட்ட வள மையத்திலிருந்தோ, தாங்கள் கற்பிக்கும் பள்ளிகளில் இருந்தோ தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு வகுப்புகளை எடுக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, இந்தத் திட்டத்தின்படி, 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.24 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 44,800 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தமிழக அரசு தரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி