தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி



இன்று (26.02.2014) காலை தொடக்க கல்வி இயக்குநர் முனைவர்.இளங்கோவன் அவர்களை நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடமிருந்தும்,பட்டதாரி ஆசிரியர் பாடவாரியான காலிப்பணியிட விபரம் மற்றும் பாட வாரியான தேர்ந்தோர் பட்டியல் விபரமும் தொகுக்கப்பட்டு வருவதாகவும், அப்பணி வெள்ளிகிழமை நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

எனவே அதன் பின், ஓரிரு தினங்களில் (சனி அல்லது ஞாயிறு) பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி