மாணவரை போல், ஆசிரியர்களை நிற்க வைத்து தண்டனை : தேர்வுத் துறை தடாலடி நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

மாணவரை போல், ஆசிரியர்களை நிற்க வைத்து தண்டனை : தேர்வுத் துறை தடாலடி நடவடிக்கை.


பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விபரங்களை சரிவர பூர்த்தி செய்யாத ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களை, நேற்று, இயக்குனரகத்திற்கு வரவழைத்து, நீண்ட நேரம் நிற்க வைத்து,
தேர்வுத் துறை, தண்டனை அளித்தது."பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் முழுமையான விபரங்களை, ஒரு படிவத்தில் பூர்த்தி செய்து, அந்த விபரங்கள் சரியானவை; உண்மையானவை என, சம்பந்தபட்ட மாணவர், வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மாணவரின்பெற்றோர் ஆகிய, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும்' என, தேர்வுத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பூர்த்தி செய்த படிவங்கள் பெறப்பட்டன.

இதில், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பிளஸ் 2 படிவங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. மாணவர்களின் புகைப்படத்தைமாற்றி ஒட்டியது, பிறந்த தேதியை தவறாக பதிவு செய்தது உள்ளிட்ட பல தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சம்பந்தபட்ட பள்ளிகளின் தலைமைஆசிரியர், வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரையும், நேற்று, தேர்வுத்துறை இயக்குனர், சென்னைக்கு அழைத்தார்.ஆசிரியர் அனைவரிடமும், எந்தவித விசாரணையும் நடத்தாமல், பல மணி நேரம், அப்படியே காத்திருக்க வைத்து, தேர்வுத்துறை, நூதன தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது. மாணவர் தவறு செய்தால், வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்து தண்டனை வழங்குவது, ஆசிரியர்களின் வழக்கம்.

அதுபோல், ஆசிரியர்களையே, மணிக்கணக்கில், இயக்குனரகத்தில் நிற்கவைத்து, நூதன தண்டனை அளித்ததை நினைத்து, ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், பாலகிருஷ்ணன் கூறுகையில், ""தேர்வுத்துறையின் நடவடிக்கை, அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்களிடம், உரிய விசாரணையை நடத்தி, அனுப்பி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, மாணவர்களைப் போல், நீண்டநேரம் நிற்கவைத்து, தண்டனை அளித்திருப்பது, மிகவும் கொடுமை. இதுபோன்ற போக்கை,தேர்வுத்துறை கைவிட வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி