பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2014

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு.


பள்ளி செல்லா குழந்தைகள்மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.
அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, குழந்தைகள் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்போது ஜனவரி 29ம் தேதி முதல், பிப்ரவரி 5ம் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.தற்போது, திருப்போரூர், காட்டாங்கொளத்துார் ஒன்றியங்களில், இறுதிக்கட்ட பணி தீவிரமாய் நடந்து வருகிறது.அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், வீடுவீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இந்த பணியில், அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி