ஏப்.10க்குள் +2 விடைத் தாள் திருத்தி முடிக்க திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2014

ஏப்.10க்குள் +2 விடைத் தாள் திருத்தி முடிக்க திட்டம்.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு விடை தாள்கள், அந்தந்த மாவட்டங்களில் திருத்தப்படுவதில்லை. மற்ற மாவட்டங்களுக்கு அவை அனுப்பப்படுகின்றன.இதற்கான மையங்களில் வரும் 24ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. காலை 8.30 முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 1.30 முதல் மாலை 5.30 மணி வரை என இரண்டு பிரிவாக விடைத்தாள் திருத்தப்படும். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் விடைத் தாள் திருத்தப்படுகிறது.

வரும் 21, 22ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் பங்கேற்கும் பயிற்சி கூட்டம் நடக்கிறது.இதில், விடைத்தாள் திருத்தும் முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதன்பின், 24ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். மக்களவைத் தேர்தல் வருவதால், அதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, விடைத்தாள் திருத்தும் பணியை வரும் 24ல் தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி