தேர்தலை முன்னிட்டு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 23, 24, 25ம் தேதி விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2014

தேர்தலை முன்னிட்டு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 23, 24, 25ம் தேதி விடுமுறை.


தேர்தலை முன்னிட்டு தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் வேலை நாட்களில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித்துறை நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை: நாடாளுமன்ற தேர்தல்ஏப்ரல் 24ம் தேதி நடக்கிறது.இதையடுத்து தொடக்க நடுநிலை பள்ளிகள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏப்ரல் 23, 24 மற்றும் 25ம் தேதிகள் பள்ளி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. அந்த 3 நாட்களை ஈடுகட்டும் விதமாக மார்ச் 22, ஏப்ரல் 5 மற்றும் 26ம் தேதிகளில் பள்ளிகள் செயல்படும். மேலும் மூன்றாம் பருவத் தேர்வை ஏப்ரல் 21, 22, 26, 28 மற்றும் 29ம் தேதிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவிரவும் ஏப்ரல் 30ம் தேதி பள்ளி வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி