கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான, "நெட்" தேர்வில் பங்கேற்க, ஓ.பி.சி., பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 5 சதவீதம் குறைக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) முடிவெடுத்துள்ளது.
அடுத்த தேர்வுகளில் இந்த மதிப்பெண் குறைப்பு அமலாகலாம் என கூறப்படுகிறது.முதுகலை பட்டம் - எம்.பில்., முடித்தவர்கள், கல்லூரி பேராசிரியர் பணியில் சேர,யு.ஜி.சி.,யின், "நெட்" தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
இத்தேர்வில் பங்கேற்க முதுகலை பட்டப்படிப்பில், ஓ,பி.சி., பிரிவினர் 55 சதவீதமும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும், "நெட்" தேர்வில் இந்த மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். இந்நிலையில், ஓ.பி.சி., பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை, 5 சதவீதம் குறைக்க யு.ஜி.சி., முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த யு.ஜி.சி., கூட்டத்தில், இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் நடக்கும், "நெட்" தேர்வில், இந்த தகுதி மதிப்பெண் குறைப்பு அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது. மதிப்பெண் குறைப்பு மூலம் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இணையாக ஓ.பி.சி., பிரிவினர் தேர்வில் அதிகளவில் பங்கேற்பர் என தெரிகிறது.
This comment has been removed by the author.
ReplyDelete