கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2014

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்.


கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகளை நேரிடையாகச் சென்று கணக்கெடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி, இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள, நகராட்சி, பஞ்சாயத்து, பேரூராட்சிக்கு உட்பட்ட 2,883 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கிறது.மேலும், செங்கல் சூளை, கட்டப் பணி, சாலைப் பணி, உணவு விடுதி மற்றும் இதரப் பணிகள் நடக்கும் இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இப்பணியில் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என 220 பேரும், சிறப்பாசிரியர்கள் 75 பேரும் ஈடுபடுகின்றனர். பள்ளிச் செல்லா, பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ, மாணவிகள் விவரங்கள் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்குமாறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, சுகாதாரத் துறை, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கணக்கெடுப்பில் கண்டறியப்படும் 6 வயது முதல், 14 வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு தனிக்கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கப்படும். குறுகிய காலத்தில் பள்ளியை விட்டு இடைநின்ற 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால இணைப்பு மையம் மூலமும், மூன்று மாதங்களுக்கு மேல் பள்ளியை விட்டு இடை நின்றவர்களுக்கு நீண்ட கால இணைப்பு மையம்மூலமும் கல்வி கற்பிக்கப்படும்.புலம் பெயர்ந்த, தெருவோரக் குழந்தைகள், நாடோடிக் குழந்தைகள், நரிக்குறவர் இன குழந்தைகள் ஆகியோருக்கு உண்டு உறைவிட மையம் மூலமும் கல்வி கற்பிக்கப்படும். கண்டறியப்படும் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பு பயிற்சி பெறுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி