குளறுபடிகள்: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு வாபஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2014

குளறுபடிகள்: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு வாபஸ்.


வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடந்தது.
தேர்வுகள் முடிந்து கடந்த 10ம் தேதி இரவு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் நன்றாக எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாகவும், தேர்வே எழுதாத மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாகவும், என பல்வேறு குளறுபடிகளுடன் முடிவுகள் வெளியாயின.இதை கண்டித்து வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களை நடத்தினர்.பல்கலைக்கழகம் சார்ப்பில் குளறுபடிகள் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வு மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டு கமிட்டி,பல்கலைக்கழக நிர்வாகத்துடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. இதில் இணையதளத்தில் வெளியான தேர்வு முடிவு வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. வரும் 31ம் தேதிக்குள் சரியான தேர்வு முடிவுகளை கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் உயர்கல்வித்துறை செயலரின் ஒப்புதலின்பேரில் தேர்வு முடிவுகள் மீண்டும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி