பென்ஷன் பெற 58 வயதானதும் தகவல் தர ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2014

பென்ஷன் பெற 58 வயதானதும் தகவல் தர ஏற்பாடு.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சந்தாதாரர்களாக உள்ளவர்கள்,தொழிலாளர் பென்ஷன் திட்டம் 1995ன் கீழ், 58 வயது பூர்த்தியானதும் பென்ஷன் பெற முடியும்.
இத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள், 58 வயதை பூர்த்தியானதும் பென்ஷன் பெறுவதற்கு தகுதியுள்ளது என்ற தகவலை, இ.பி.எப்.ஓ., என்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தகவல் தெரிவிக்கும். பென்ஷன் திட்டத்தின் கீழ், பென்ஷன் வழங்குவதில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க, 123 கள அதிகாரிகளுக்கு, இ.பி.எப்.ஓ., உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 'சந்தாதாரர்களில், 58 வயதானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் மூலம் கடிதம் அனுப்பப்படும். இவர்கள், விண்ணப்பித்து, பென்ஷன் மற்றும், பி.எப்., தொகையை பெற்று கொள்ளலாம்,' என இ.பி.எப்.ஓ., அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி