மாணவர்களை கவர புதிய சிறப்பு ப்ரீபெய்டு திட்டம் : பி.எஸ்.என்.எல். அறிமுகம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2014

மாணவர்களை கவர புதிய சிறப்பு ப்ரீபெய்டு திட்டம் : பி.எஸ்.என்.எல். அறிமுகம்...


குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கான புதிய ப்ரீபெய்டு திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தில் 20 உள்ளூர் மற்றும் தேசிய குறுஞ்செய்திகளை(எஸ்.எம்.எஸ்) இலவசமாக பெறலாம்.மேலும் 45 நிமிஷம் பி.எஸ்.என்.எல். நிறுவன மொபைல் எண்கள் அல்லது இதரமொபைல் போன் எண்களுடனும் இலவசமாக பேசலாம்.நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி அனுப்பும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கு 5 பைசாவும், 10 கேபி டேட்டாவுக்கு 2 பைசா எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தொலைத் தொடர்பு சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது.இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களைக் கவரும் நோக்கில் இப் புதிய சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய திட்டம் குறித்து முழு விவரங்களை சென்னை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி