சோலார் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும்போது அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என மதுரை கே.எல்.என். தகவல்தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.
சோலார் ரோடுகள் குறித்து, கல்லுாரியில் நான்காம் ஆண்டு சிவில் மாணவர்கள் சிவசங்கர், ஸ்ரீராம், அஜய்குமார், கார்த்திக் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: அமெரிக்காவில் சோலார் நெடுஞ்சாலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை இல்லை. நெடுஞ்சாலைகளில் தரமான தார் ரோடு அமைத்தாலும், இரண்டாண்டுகள் கழித்து, பராமரிப்புப் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.இதற்கு நிதி அதிகம் செலவாகும். சோலார் கண்ணாடியால் ஆன ரோடுகளை அமைத்தால், ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது டயருக்கும், ரோடுக்கும் இடையே ஏற்படும் உராய்வில் வெப்பம் உற்பத்தியாகும். அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம்.
சூரியஒளி ஒன்றுதான், தீர்ந்து போகாமல் தொடர்ந்து கிடைக்கும் ஒரே ஆதாரம்.ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது, வழுக்காமல் இருப்பதற்கேற்ப, உராய்வு விசையை அடிப்படையாக கொண்டு, கண்ணாடி பேனல்கள் தயாரிக்கலாம். மழைக் காலத்திலும் வழுக்காமல் செல்லும். சூரிய ஒளியில் மட்டுமின்றி, பனியிலும் மின்சாரம் தயாரிக்கலாம். உறைபனிக் கட்டியிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை கொண்டு, மின்சாரம் தயாரிக்கலாம். அதேநேரத்தில், பனியையும் உருகவைக்க முடியும். ஜம்மு, காஷ்மீரில் அதிக பனியால் ரோடுகள் பாதிக்கப்படும்போது, சோலார் ரோடுகள் கைகொடுக்கும்.எங்கள் கல்லுாரியில் ஒரு லட்ச ரூபாயில், 12 மி.மீ., கனமுள்ள சோலார் பேனல்களை அமைத்துள்ளோம். இதில் டூவீலர், கார்கள் ஏறிச் சென்றாலும் உடையாது. டயர் உரசும்போது, கிடைக்கும் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்த மின்சாரத்தைக் கொண்டு, இரவில் நான்கு டியூப்லைட்கள் எரிகின்றன என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி