கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2014

கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை.


* கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மிக அருகில் இருந்து கணினித் திரையின் வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம்.

* கணினித் திரையின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துக்கொள்வது நல்லது.

* 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது.

* அதற்கு சாத்தியமில்லாதவர்கள். உள்ளங்கைகளால் கண்களை மென்மையாக மூடி,அதிலிருந்து வரும் இளஞ்சூடு மூலம் இரண்டு நிமிடங்கள் ஒய்வு கொடுக்கலாம். கண்கள் பாதிக்கப்படாதபடி இது ஓரளவு காப்பாற்றும்.

* பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளையும், உடலையும் நீட்டி, மடக்கிக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம்.

* கணினியில் தட்டச்சு செய்யும்போது உடலை நேர்க்கோட்டில் வைத்திருப்பதுஅவசியம். அப்போது முதுகுத்தண்டு நேராக இருக்கும். இப்படிச் செய்தால் உடல் வலியைக் குறைக்கலாம்.

* பாதங்களைத் தரை மீது சமமாக வைத்திருக்க வேண்டும். உடலின் மொத்த எடையையும் பாதம் தாங்குவதால், பாதத்தைச் சமமாக வைத்திருப்பது அவசியம்.

* தட்டச்சு செய்யும்போது முழங்கைகளை இடையின் பக்கத்தில் வைத்திருப்பது, கைகளுக்கு ஆதரவாக இருக்கும். தோள்பட்டை வலியும் குறையும்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி