நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டு வந்த சுழ்நிலையில் பெருகிவரும் மக்கள் தேவையை கருத்தில் கொண்டும் நிர்வாகத்தை மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றும் எண்ணத்துடனும் 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர்களை நேரடி நியமனம் செய்து வருகிறது.
கிராம நிர்வாக அலுவலர் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும். கிராமக் கணக்குகளை கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகக் கட்டடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். பயிராய்வு ஒவ்வொரு மாதமும் செய்து அடங்கலில் உரிய குறிப்புகள் ஏற்படுத்தி அதற்குரிய மாதக் கணக்குகளையும் அந்தந்த மாதமே முடித்து சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் என பொது மக்கள் கோரும் எல்லா சான்றுகளையும் சோதித்தறிந்து உரியவருக்கு தாமதமில்லாமலும், எவ்விதப் புகாருக்கு இடமில்லாமலும் வழங்கவேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் போது சரியான விவரங்களை வட்டாட்சியருக்கு அனுப்பி, வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க உறுதுணையாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அமைப்பை பயனுள்ளதாக ஆக்க, கிராம நிர்வாக அலுவலர் நாட்குறிப்பு பராமரிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதியதாக கட்டியிருக்கும் அலுவலகத்தில் கட்டாயமாக காலை 10 மணி முதல் 12.00 மணி வரை கிராம நிர்வாக அலுவலர் இருக்க வேண்டும்.
கிராம மற்றும் வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு, பணிகள் மற்றும் கடமைகள்:
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம எல்லைக்குட்பட்ட காவல் நிலையக் காவல்துறை அலுவலர்கள் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து கிராமப் பொதுமக்கள் அமைதியுடனும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகளின்றி வாழ்வதற்கு பரஸ்பர ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்துகொள்வது மிகவும் அவசியமாகும். கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையினருக்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் உதவி செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்கள் ஆவர்.
1. காவல்துறையினர் கிராமத்தில் யாதொரு குற்றமும் நடவாதபடி தடுக்கும் போதும்,
விபத்துகள்:
வட்டாட்சியருக்கு உடனே தகவல் தெரிவிப்பதுடன், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர் ஆகியோருக்கு துரிதமாக தகவல் தெரிவிக்கவேண்டும்.
காயம் ஏற்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
ஆயுதம்:
இதரப் பணிகள்:
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தவும் சமரசத் தீர்வு காணவும், அமைதிக்குழுக் கூட்டத்திற்கு கிராமத்தில் கூட்டம் நடத்தவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு உயர் அலுவலர்களுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் நேரிடும்போது கிராம நிர்வாக அலுவலர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்:
மரண விசரணையை கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ளக்கூடாது. காவல்துறையினர் குற்றவியல் செயல் நடுவருக்குத் தகவல் தெரிவித்து அவர் குற்றவியல் நடவடிக்கை சட்டத்தின்கீழ் பிரேத விசாரணை மேற்கொள்ளும்போதும், குற்றவியல் செயல் நடுவர் விசரணையின்போது, கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்து ஏற்பாடுகளும், உதவிகளும் செய்தல் வேண்டும்.
கிராம எல்லைக்குள் அசம்பாவித மரணம், கொள்ளை, சந்தேக மரணம் போன்ற நிகழ்வுகளை வட்டாட்சியருக்கும் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையப் பொறுப்பு அலுவலருக்கும் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கும் காவல்துறையினருக்கும் தகவலறிக்கை அனுப்ப வேண்டிய சம்பவங்களாவன:
2. கிரிமினல் குற்றம்
3. தற்கொலை
4. தற்செயலாக ஏற்படும் மரணம்
5. தீப்பற்றிய சம்பவங்கள்
6. கேடி ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம்
7. இனக்கலவரங்கள்
8. தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம்
9. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைப் பொருள் விற்றல்
10. கிராமத்தில் ஒருவர் இறந்ததினாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ பொது அமைதிக்கு ஏற்படும் இடையூறுகள்
11. ஆயுதத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்
12. அரசு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்குடன் தெரிய வருகின்ற செயல்பாடுகள்
13. ஆடு, மாடுகள் திருட்டு போன்றவைகள்
14. சாலை மற்றும் இதர விபத்துகள்
15. குழந்தைத் தொழில்
16. ஆள்கடத்தல்கள் எனத் தெரிகின்ற குற்றங்கள்
17. கொத்தடிமை
18. குழந்தைகள் திருடுதல்
19. பொது இடங்களில் சூதாட்டம்
20. கிணற்றில் மற்றும் குளங்களில் கேட்பாரின்றிக் கிடக்கும் பிணங்கள்
இதர பொதுப் பணிகள்:
மின்சாரக் கருவிகள், மின்சாரக் கம்பிகள், மின்சாரக் கசிவுகள் போன்றவற்றினால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை அறிய வந்தால் மின்சாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.
தேர்தல் பணிகளிலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் போதும் முழு ஒத்துழைப்பு தருவது.
நிலவரி வசூலில் மற்றும் தனது அரசுப் பணியில் இடையூறு ஏற்பட்டால் வட்டாட்சியருக்கு தகவல் அளிக்க வேண்டும்.
எப்போதெல்லாம் புதையல் ஒன்று பணமாக ரூபாய் பத்துக்கும் அல்லது அதனின் மதிப்பு ரூபாய் பத்துக்கும் மேலாக கண்டெடுக்கப்பட்டது என்று தெரிந்தவுடன் அதைக் கைப்பற்றி வட்டாட்சியருக்கு உடனடி அறிக்கை செய்து, அதை ஒப்படைக்க வேண்டும். புதையல் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய புதைபொருள் சட்டம் - 1878 கூறுகிறது.
இதே பதிவை http://maniyarasanblog.blogspot.in/ என்ற வலைமனையிலும் பதிவிட்டுள்ளேன்
Super maniyarasan sir,
ReplyDeleteOru chinna correction Village admin LA irundhu 25 questions sir, see the notification....
IS ANYBODY KNOW WHAT IS THE BCM COMMUNAL RANK RUNNING TODAY IN TNPSC GROUP 4 POSTINGS. PLEASE KINDLY UPDATE IT. THANK YOU.
ReplyDeleteBC M general- 44,
DeleteBCM Women- 21,
BC M PSTM. - 07,
BC M women PSTM- 05,
Unga rank enna chittu mittu madam.... may 8 th varaikkum bcm candidates kku chances irukku...
BCM (WOMEN) 126 KKU CHANCE IRUKKUMA
DeleteBCM IL IRUNTHU GENERAL TURN IL POSTING PODAPPATTULLATHA? BCM COMMUNAL RANK 126 KKU CHANCE IRUKKUMA??
DeleteCOMMUNAL RANK IL GENERAL, WOMEN,ENDRU THANIYAAHA ULLATHAA?
DeleteUngalukku call letter vandhuladha?
DeleteVerification date eppo?
Ungalukku TN TET teacher posting confirm ah kaedaikkum....
Deletecall letter varavillai. overall rank 10500 kku mel. communal rank 126
DeleteCall letter varavillai general chance illa....I think ur mark 207 ... ennoda mark 205.5 overall rank 11527 and communal rank BC general 5430 and typist rank BC general 305 and overall rank 414... don't worry tet paper2 posting ungalukku 100% kaedaikkum madam...
Deletehi i got 196.5(sc) in gr4 i study 10th tamil but i am not submit pstm how much is the least mark in that catagery???pls reply
Deleteபிரபல பாடலாசிரியர் குல்சாருக்கு பால்கே விருது!
ReplyDelete2013 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது.
1956 ஆம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருகிறவர் பாடலாசிரியர் குல்சார். 79 வயதான குல்சார் பல இந்தி திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.
இந்நிலையில், 2013 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு குல்சார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
CAN YOU PLEASE KINDLY GIVE DETAILS FOR MY QUESTIONS ABOVE
Deleteபதில் தெரிந்திருந்தால் சொல்லாமல் இருந்திருப்பேனா....
Delete